சூப்பர் சிங்கர் ஜூனியர் 2 - ஓரு தந்தையின் அனுபவம்
சூப்பர் சிங்கர் ஜூனியர் – 2 - சுரேஷுக்கு நேர்ந்த அனுபவம் இங்கே பதிவாக. இதை கோபிநாத் "குற்றம் நடந்தது என்ன?" என்ற நிகழ்ச்சியில் போடுவாரா ?
திரு. எடிட்டர் அவர்களுக்கு,
ஸ்டார் விஜய் டிவியில், சமீபகாலமாக ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் – 2 தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் பங்குபெற என் மகன் சாய் அபிஜித்தும் சி.டி.யில் குரல் வளத்தைப் பதிவு செய்து அனுப்பி, அதன் வாயிலாக சென்னை வர்த்தக வளாகத்தில் 7.7.2009 அன்று நடைபெற்ற ஆடிஷனுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக விஜய் டி.வி.யிலிருந்து கடிதமும் கொரியர் மூலம் பெற்று என் மகனும் கலந்து கொள்ளச் சென்றான்.
காலை 8 மணிக்கே நிகழ்ச்சியில் பங்குபெறுவோர் இருப்பது அவசியம் என்பதால், நேரத்திலேயே அங்கு சென்றடைந்தோம். அங்கோ சுமார் ஆயிரம் சிறுவர் சிறுமியருக்கு மேல் தம் பெற்றோருடன் வெயிலில் 9.00 மணி வரை காத்திருந்து படிவம் பெற்று நிகழ்ச்சியும் 11.30 மணியளவில் தொடங்கியது. இந்நிகழ்ச்சி முழுவதற்கும் மூவர் மட்டுமே நடுவர்களாக அறிமுகமும் செய்து வைக்கப்பட்டு, சுமார் 12 மணி அளவில் குழந்தைகள் குரல் வளத்தை நிரூபிக்கும் ஆடிஷனும் தொடங்கியது. எம்மையும் மற்றும் சிலரையும் 2 மணியளவில் கூப்பிடுவதாக அறிவித்தனர். ஆனால் மாலை 4.30 மணிவரையிலும் 625 சிறுவர் சிறுமியரே ஆடிஷனுக்குட்படுத்தப்பட்டனர்.
என் மகனின் அடையாள எண்ணோ 1364. 12 மணியிலிருந்து 4.30 மணி வரையிலும் 625 பேர்களே ஆடிஷனுக்குட்படுத்தப்பட்டனர். ஆனால் 4.30 மணியிலிருந்து 6.30 மணிக்குள் சுமார் 900 பேர் ஆடிஷன் முடித்து அனுப்பி வைக்கப்பட்டனர்.
எனில் எந்த அவசர கோலத்தில் இந்நிகழ்வு முடிக்கப்பட்டது என்பதை அனைவரும் உணரலாம். என் மகனை ஆடிஷன் செய்ய நடுவர் பாப் ஷாலினி இருந்தார். இவன் இரண்டு வரிகூட பாடாத நிலையில் அடுத்து வேறு பாடலை பாட பணித்துள்ளார்.
ஷாலினி அவர்கள் இரண்டாவ பாடலிலும் இரண்டு வரிகளைக்கூட கேட்காமல் Rejected என்ற பொத்தானை அழுத்தி என் மகனை அனுப்பி வைத்துவிட்டார்.
என் மகன் பாடுவது இது முதல் முறையல்ல. கடந்த 4 ஆண்டுகளாக இன்னிசை நிகழ்ச்சிகளில் திரைஇசை பாடல்களை பாடி வருபவன்தான். இவர்கள் எந்த அளவுகோலை வைத்து குழந்தைகளை தேர்ந்தெடுக்கிறார்கள் என்பது புரியாத புதிரே. இந்நிகழ்ச்சியில் தேர்வு செய்யப்படாத பல குழந்தைகள் கண்களில் கண்ணீருடன் மன அழுத்தத்தோடு வெளிவருவதை பார்த்தால் பெற்றவர்களும் மற்றவர்களும் மனமுடைந்து போவர். அதிலும் மன வேதனையில் வரும் குழந்தைகளையும் விஜய் டி.வி. கேமரா ஆபரேட்டர்கள் துரத்தித் துரத்திப் படம் பிடிப்பது எதற்கென்றே தெரியவில்லை.
தயவு செய்து எந்த டி.வி. சேனலாகட்டும். சின்னஞ் சிறுவர்களின் எதிர்காலத்தை, கனவுகளை அழித்துவிடாதீர்கள் என்பதே எமது தாழ்மையான வேண்டுகோள். உத்வேகமும் உற்சாகமும் கொடுத்து வளர்க்க வேண்டிய சின்னஞ்சிறார்களை பெற்றோரும், மீடியாக்களும் அதளபாதாளத்தில் தள்ளிவிடாதீர்கள். இன்றைய சின்னஞ் சிறியோரே நாளைய ஒரு SPBஆகவோ அல்லது ஆஸ்கார் புகழ் ரஹ்மானாகவோ தோன்ற வல்லவர்கள். அவர்களின் உணர்வுகளை புரிந்துகொள்வோமாக... வாழ்க இந்தியா... வெல்க நமது இளைஞர் பட்டாளம்.
இவண்,
ஏ.ஆர். சுரேஷ்,
ஆழ்வார்திருநகர் அனெக்ஸ்,
சென்னை – 87.
Different Comparisons
-
https://designersiva.blogspot.com/2023/11/my-seo-portfolio.html
https://designersiva.blogspot.com/2020/12/passive-income-ideas-increase-your-cash.html
h...
No comments:
Post a Comment
http://tv-actors.blogspot.com/